போட்டித் தேர்வினில் வெற்றி வாகை சூடவேண்டுமென்றால் உங்களுக்கு பொதுத்தமிழ்தான் கட்டாயம் கை கொடுக்கும் என்பதை மறந்து விடவேண்டாம் மறந்தும் இருந்துவிட வேண்டாம்.. தமிழ் கட்டாயத் தேர்வு என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே பொதுத்தமிழ் பகுதிகளை சற்று ஆழமாக படித்துக்கொள்ளுங்கள் .. முதலில் அடிப்படையான இலக்கணம் பாடத்தை நன்றாக படித்து பயிற்சி எடுக்க வேண்ட்டும்.. தமிழின் சிறப்பு மிக்க இலக்கியங்களை படித்தும் அதிலுள்ள முக்கிய செய்திகளை அறிந்து வைத்திருத்தல் அவசியம் ஆகும். அதேபோல தமிழறிஞர்களும் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தமிழ்த்தொண்டு என அறிந்து வைத்திருந்தல் ஒரு போட்டித்த் தேர்வாளரின் கடமை.. மேற்சொன்னவற்றை நன்றாகப்
படித்தால் மட்டுமே தேர்வாக முடியும். வருடத்திற்கு வருடம் தேர்வெழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு படியுங்கள்..
பகுதி -அ இலக்கணம்
பகுதி -ஆ
இலக்கியம்பகுதி -இ தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | ||
பகுதி -அ இலக்கணம் | ||
1 | பொருத்துதல் 1.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 2.புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்கள் | |
2 | தொடரும் தொடர்பும் அறிதல் 1.இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் 2.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் | |
3. | பிரித்தெழுதுக | |
4 | எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல் | |
5 | பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் | |
6 | பிழை நீக்கம்சந்திப்பிழை நீக்குதல்ஒருமை பன்மை நீக்குதல்மரபுப் பிழை நீக்குதல்வழூஉச் சொற்களை நீக்குதல்பிறமொழிச் சொற்களை நீக்குதல் | |
7. | ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கண்டறிதல் | |
8 | ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் | |
9 | ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல் | |
10 | வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் | |
11 | வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர் ,தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல் | |
12 | அகரவரிசைப் படி சொற்களை சீர்செய்தல் | |
13 | சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் | |
14 | பெயர்ச்சொல்லின் வகையறிதல் | |
15 | இலக்கணக் குறிப்பறிதல் | |
16 | விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
| |
17 | எவ்வகை வாக்கியமென கண்டெழுதுதல் | |
18 | தன்வினை,பிறவினை ,செய்வினை, செயப்பாட்டுவினை போன்றவை கண்டறிதல் | |
19 | உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் | |
20 | எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் | |
பகுதி -ஆ இலக்கியம் | ||
1. | திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
அன்பு ,பண்பு ,கேள்வி , அறிவு , அடக்கம் , ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம்,
வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை,பெரியாரைத் துணைக்கோடல்,
பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.
| |
2. | அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள். | |
3 | கம்பராமாயணம் - குறித்த செய்திகள் , மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள் | |
4 | புறநானூறு - அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள். | |
5 | சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறு காப்பியங்கள் தொடர்பான செய்திகள் | |
6 | பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.. | |
7 |
சிற்றிலக்கியங்கள்
திருக்குற்றாலக் குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், தமிழ்விடு
தூது ,நந்தி கலம்பகம் விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து,
திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம்
குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
| |
8 |
மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில்பாட்டு - இரட்டுற மொழிதல்
(காளமேகப் புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )
| |
9 |
நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
| |
10 | சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர்,குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார் எச்.ஏ கிருட்டிணப்பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப்பெயர்கள்
| |
பகுதி -இ தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | ||
1 | பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள் | |
2. | மரபுக்கவிதை, - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள். | |
3. | புதுக்கவிதை - ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா. மீனாட்சி, சி. மணி, சிற்பி, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். | |
4. | தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - நேரு - காந்தி - மு.வ. - அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள். | |
5 | நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள் | |
6 | தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் - பொருத்துதல் | |
7 | கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைபடக்கலை தொடர்பான செய்திகள் | |
8 | தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் | |
9 | உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப்பிள்ளை, திரு.வி.க. வையாப்புரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள். | |
10 | உ.வே. சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள். | |
11 | தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் | |
12 | ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள் | |
13 | பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர் - சமுதாயத் தொண்டு. | |
14 | தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் | |
15 | உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும். | |
16 | தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் | |
17 | தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு ( தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்) | |
18 | தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள் | |
19 | உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் | |
20 | சமயப் பொதுவுடைமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள். |