எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , » TNPSC - PODHUTAMIL - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணம் -

TNPSC - PODHUTAMIL - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணம் -




வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில்  எதிர்ச்சொல் அறிதல் ஆகியவற்றைப் பற்றி பார்த்தோம்.(பார்க்காதவர்கள் பார்க்க)

இந்தப்பகுதியில் பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பற்றி பார்க்கலாம் வாங்க

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்:

நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ அல்லது ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும், ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்கும். மேலும் ஒரு குழுவையோ, இனத்தையோ சார்ந்திருக்கும். அந்த நான்கில் ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும். இதுவே பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

 எடுத்துக்காட்டு - 1

மெய், வாய், கண், கன்னம்

         மெய், வாய், கண் போன்றவை ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே கன்னம் என்ற சொல் இதில் பொருந்தாச் சொல் ஆகும்.

எடுத்துக்காட்டு - 2 

மாம்பழம்,பலாப்பழம்,சீதாப்பழம்,வாழைப்பழம்

இதில் மா,பலா,வாழை மூன்றும் முக்கனிகளில் உள்ளடங்கியவை எனில் இதில் பொருந்தாத ஒன்று  சீதாப்பழம்.

எடுத்துக்காட்டு - 3 

ஈரோடு,நாகர்கோயில்,கோயம்புத்தூர்,திருப்பூர்

          இதில் ஈரோடு,கோயம்புத்தூர்,திருப்பூர் ஆகிய மூன்றும் மாவட்டம் மற்றும் ஊரின் பெயர் ஆனால் நாகர்கோயில் என்பது ஊரின் பெயர் மட்டுமே.ஆகவே இதில் பொருந்தாச் சொல் என்பது  நாகர்கோயில்.

வினா எப்படி கேட்கப்படும்?



2018  ம் ஆண்டு தேர்வில் கேட்கப்பட்ட வினா இது.

எங்கு படிக்கலாம்?

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடப் புத்தகங்களில் உள்ள இனமான,குழுவான,ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களைத் தொகுத்து வாசித்தால் போதும்..

உதாரணம் :

முப்பால்,நாற்திசை,ஐம்புலன் ஆகியவை..

நம் தளத்திலே தொகுக்கப்பட்ட முக்கிய சொற்களை வாசிக்கலாம் வாங்க..
--------------------------------------------------------------------------------------------------------------
மூவண்ணம் - காவி, வெண்மை, பச்சை
--------------------------------------------------------------------------------------------------------------
மூவேந்தர்கள் - சேரன், சோழன், பாண்டியன்
-------------------------------------------------------------------------------------------------------------
முக்கனி - மா, பலா, வாழை
-------------------------------------------------------------------------------------------------------------
முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
-------------------------------------------------------------------------------------------------------------
முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
------------------------------------------------------------------------------------------------------------
முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
------------------------------------------------------------------------------------------------------------
முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
-------------------------------------------------------------------------------------------------------------
மூன்று முரசு - கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு
------------------------------------------------------------------------------------------------------------
முச்சங்கம் - முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
------------------------------------------------------------------------------------------------------------
மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
-------------------------------------------------------------------------------------------------------------
நாற்திசை - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
--------------------------------------------------------------------------------------------------------------
நாற்பால் - அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்
------------------------------------------------------------------------------------------------------------
நால்வகை உணவு - உண்ணல், தின்னல், பருகல், நக்கல்
-------------------------------------------------------------------------------------------------------------
நால்வகை சொல் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
----------------------------------------------------------------------------------------------------------------
நான்மறை - ரிக், யஜூர்,சாமம், அதர்வணம்
--------------------------------------------------------------------------------------------------------------
நான்கு குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
---------------------------------------------------------------------------------------------------------------
நாற்படை - தேர், யானை, குதிரை, காலாட்படை.
---------------------------------------------------------------------------------------------------------------
பாவகை - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
---------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெருங்காப்பியங்கள்- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி.
---------------------------------------------------------------------------------------------------------------
ஐஞ்சிறுங்காப்பியங்கள்- சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம்,
நாககுமார காவியம், உதயணகுமார காவியம்.
--------------------------------------------------------------------------------------------------------------
ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
--------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தொகை - முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்
-----------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால்
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெரும்பொருள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்புலன் - ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
---------------------------------------------------------------------------------------------------------------
ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
--------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெருங்குழு - சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்
----------------------------------------------------------------------------------------------------------------
அறுசுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
பெரும்பொழுது - கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பணி,
இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்
---------------------------------------------------------------------------------------------------------------
சிறுபொழுது - காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை
---------------------------------------------------------------------------------------------------------------
ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்
---------------------------------------------------------------------------------------------------------------
பெண்களின் ஏழு பருவங்கள்- பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை, அரிவை,தெரிவை, பேரிளம்பெண்
---------------------------------------------------------------------------------------------------------------
எட்டுத்தொகை - நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து,பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
--------------------------------------------------------------------------------------------------------------
நவரத்தினங்கள் - மரகதம்,மாணிக்கம்,முத்து,வைரம்,வைடூரியம்,கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்
---------------------------------------------------------------------------------------------------------------
நவதானியங்கள் - நெல்,துவரை,பச்சைப்பயறு,உளுந்து,எள், அவரை,கடலை, கொள்ளு, கோதுமை
-------------------------------------------------------------------------------------------------------------
ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10
- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
-------------------------------------------------------------------------------------------------------------
பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10
காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை,அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்
--------------------------------------------------------------------------------------------------------------
பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை,சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை,கூத்தராற்றுப்படை,மதுரைக்காஞ்சி,நெடுநல்வாடை,குறிஞ்சிப்பாட்டு,முல்லைப்பாட்டு,பட்டினப்பாலை.
--------------------------------------------------------------------------------------------------------------
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள்

நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது,இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை,பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள்,முதுமொழிக்காஞ்சி, ஐந்தினை ஐம்பது, ஐந்திணைஎழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலைநூற்றைம்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, கைந்நிலை.
--------------------------------------------------------------------------------------------------------------
புறத்திணை - வெட்சி, கரந்தை,வஞ்சி,காஞ்சி, நொச்சி, உழிஞை,தும்பை,வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,பெருந்திணை
--------------------------------------------------------------------------------------------------------------
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
------------------------------------------------------------------------------------

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
                                                                                                                
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template