எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » TNPSC - PODHUTAMIL - சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

TNPSC - PODHUTAMIL - சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் அகர வரிசைப்படி வார்த்தைகளை அமைப்பது  பற்றி பார்த்தோம் அல்லவா? (பார்க்காதவர்கள் பார்க்க)

இந்தப்பகுதியில்சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் பற்றி பார்க்கலாம் வாங்க

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்



           சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முற்றுபெற்ற சொற்றொடராக ஒழுங்குபடுத்த வேண்டும்.

   எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற முறைப்படி அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும்.

(எ.கா)
             பாரதியார் கவிதைகளை இயற்றினார்.
             கவிதைகளை இயற்றினார் பாரதியார்
              இயற்றினார் கவிதைகளை பாரதியார்
              பாரதியார் இயற்றினார் கவிதைகளை

            இதில் புகழ்பெற்ற பழமொழிகளும் பொன்மொழிகளும் புகழ்பெற்ற
மேற்கோள்களும் கேட்கப்படும். சொற்றொடரை நன்றாக வாசித்துப் பார்த்தாலே விடைகளை எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ.வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிறக்க
ஆ.சிந்தனை மொழியில் தமிழ் சிறக்க வேண்டும்
இ.மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை
ஈ.தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்.

2. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ.பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார்
ஆ.கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்
இ. பாடியவர் செயங்கொண்டார் கலிங்கப்பரணியை
ஈ.கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர்.

3. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ.வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் நிலத்தடி நீர்
ஆ.வாழ்க்கைக்கு நிலத்தடி நீர் வளமான ஆதாரமாகும்
இ.நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும்
ஈ.ஆதாரமாகும் வாழ்க்கைக்கு வளமான நிலத்தடி நீர்.

4. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ. மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள்
ஆ.முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு
இ.மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள்
இ. மழை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கிய காரணிகள்.

5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அ.வகுத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் பத்துப் பருவங்களாக
ஆ.இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்னும் பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது
இ.பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கியம்
 ஈ.பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் வகுத்துப் பாடுவது பத்துப் பருவங்களாக.

அசல் வினாத்தாள்:


சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் TOUCH HERE
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template