டெல்லி சுல்தானியர்கள்
டெல்லி சுல்தானியர்கள் யாரென்றால் 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசர்கள் ஆவார்கள். பதினொன்றாம் நூற்றாண்டில் வடஇந்தியாவைக் கொள்ளையடித்த துருக்கியக் குதிரைப்படை வீரர்கள் தான் பின் நாட்களில் டெல்லி சுல்தானத்தை நிர்மாணித்தவர்கள் ஆவர்.
கங்கைச் சமவெளியைத் தங்கள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றி பெற்று டெல்லி சுல்தானத்தை அமைத்தவர்கள். இவர்களின் துணிச்சலும் மூர்க்கக்குணமுமே வெற்றிக்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், தங்களையும் தங்கள் நாட்டையும் காத்துக்கொள்ளத் தவறிய இந்திய அரசர்களின் இயலாமையே அவர்களின் வெற்றிக்கான உண்மைக் காரணங்களாகும். இவர்களில் பல்வேறு துருக்கிய பஸ்தூனிய வம்சத்தினர் தில்லியில் இருந்து இந்தியாவை ஆண்டனர்.
டெல்லி சுல்தானியர்கள் 5 வம்சங்களாக ஆண்டனர்..
மம்லுக் வம்சம் (அடிமை வம்சம்) |
1206-90 |
கில்ஜி வம்சம் |
1290-1320 |
துக்ளக் வம்சம் |
1320-1413 |
சையிது வம்சம் |
1414-1451 |
லோடி வம்சம் |
1451-1526 |
கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று வம்சம் வாரியாக படித்து டெல்லி சுல்தான்களைப் பற்றியும் அவர்களது ஆட்சி நிர்வாகத்தைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்..
மம்லுக் வம்சம் (அடிமை வம்சம்)