காலம் |
7ஆம் நூற்றாண்டு |
நூல்கள் |
நாச்சியார் திருமொழி, திருப்பாவை |
பாடல்களின் எண்ணிக்கை |
நாச்சியார் திருமொழி – 143 திருப்பாவை – 30 |
சிறப்பு பெயர் |
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி |
சமயம் |
வைணவம் |
- திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்திய பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்.
- ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
- இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
- நந்தவனத்தில் திருத்துழாய்ச் செடிகளிடையே கிடந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்ட தெய்வக் குழந்தை இவள்.
- கண்ணனையே மணாளனாகக் காதலித்த இவ்வணங்கு அன்பின் திருவுருவானவள்.
- இவர் பூஞ்சோலையிலுள்ள மலர்களிலெல்லாம் திருமாலைக் கண்டாள். அவற்றைக் “கோவை மணாட்டி” “முல்லை பிராட்டி” என்று செல்லப் பெயரிட்டு அழைத்தாள்.
- இவள் பாடியவை நாச்சியார் திருமொழியும் (143 பாடல்கள்) திருப்பாவையும் (30 பாடல்கள்).
- வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்ற திருப்பாவை அடியை வைத்து கணக்கிடும் ஆய்வாளர்கள் ஆண்டாள் காலம் கி.பி. 885 என்று கூறுகின்றனர்.
ஆண்டாள் பாடல் வரிகள் சில
“மார்கழித்
திங்கள் மதி நிறைந்த நன்னாளால் |
“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத |
“கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ! |