வாஸ்கோடகாமா
1501இல் இருபது கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தார். அப்பொழுது கண்ணனூரில்
ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார். பின்னர் கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக
மையத்தை நிறுவினார். இதனால் கோபங்கொண்ட மன்னர் சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார்.
ஆனால் அவர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் கொச்சின் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய
கம்பெனியின் முதல் தலைநகரமாயிற்று. 1524இல் வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா
வந்தபொழுது நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524 இல் கொச்சியில் காலமானார்.
பிரான்சிஸ்கோ
-டி - அல்மெய்டா என்பவர் இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505 இல் அனுப்பப்பட்ட
முதல் ஆளுநர் ஆவார். இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே அல்மெய்டாவின்
நோக்கமாக இருந்தது. அதற்காக அவர் பின்பற்றிய கொள்கை 'நீலநீர்க்கொள்கை எனப்பட்டது. இந்தியப்
பெருங்கடலில் அரேபிய ஏகபோக வர்த்தகத்தை போர்ச்சுக்கீசியர் தகர்க்க முயன்றபோது அது எதிர்மறையாக
துருக்கி மற்றும் எகிப்தை பாதித்தது. பீஜப்பூர் மற்றும் குஜராத் சுல்தான்கள் போர்ச்சுகீசியருக்கு
எதிராக, எகிப்து மற்றும் துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர். இதனால் துறைமுகங்களின்
கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவது குறித்தும் போர்ச்சுகீசியர் கவலை அடைந்தனர். இந்நிலையில்
சாவலுக்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள் போர்ச்சுகீசியரைத்
தோற்கடித்தன. இப்போரில் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டான். பின்னர் டையூவில் நடைபெற்ற
கடற்போரில் அல்மெய்டா, முஸ்லீம் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார்.
விஜயநகரப் பேரரசுவுடன் தனது உறவை பலப்படுத்திக் கொண்டார். தூர கிழக்கு பகுதியில் அமைந்திருந்த மலக்கா தீவைக் கைப்பற்றினார். பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் என்ற இடத்தில் துறைமுகம் ஒன்றையும் கட்டினார். ஆதிக்கத்தை உண்மையாக நிலைநாட்டியவர் என்று போற்றப்படுகிறார் இவர் ஒரு சிறந்த நிர்வாகி. இந்துக்களிடம் ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்தினார்.
கல்வி வளர்ச்சிக்காக பல பள்ளிகளை திறந்தனர் போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்வதை ஊக்குவித்தார். இவரின் சமயக் கொள்கை முஸ்லிம்களுக்கு எதிரானது.இதனால் முஸ்லிம்களின் செல்வாக்கினை இவர் இழக்கத் தொடங்கினார்.இவர் கிபி 1516 ஆம் ஆண்டு கோவாவில் காலமானார்.
நினோ
-டி-குன்கா (1529-1538)
அல்புகர்க்குவிற்குப் பிறகு கவர்னரான நினோ-டி-குன்கா 1530இல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார். 1534இல் குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் 1537இல் டையூவைக் கைப்பற்றினார். பின்னர் குஜராத்தின் உள்ளூர்த் தலைவர்களிடமிருந்து டாமனைக் கைப்பற்றிய பின் சால்செட்டை 1548இல் ஆக்கிரமித்தார். இவ்வாறு போர்ச்சுக்கீசியர் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், செளல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர். வங்காள கடற்கரையில் ஹூக்ளி, சென்னை கடற்கரையில் சாந்தோம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினர். போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தினர். போர்ச்சுக்கீசியரின் செல்வாக்கினால் கத்தோலிக்க கிறித்துவம் இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோர சில பகுதிகளில் பரவியது. 1556இல் போர்ச்சுக்கீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது. அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் 1563இல் கோவாவில் இந்திய மருத்துவ தாவரங்கள் என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார். 17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியஅதிகாரம் படிப்படியாக டச்சுவிடம் வீழ்ச்சியடைந்தது. மேலும் 1739ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசிய அதிகாரம் கோவா, டையூ, டாமன் ஆகியவற்றோடு நின்றுபோனது.
அல்புகர்க்கு பிறகு வந்தவர்கள் திறமை அற்றவர்களாக இருந்தார்கள் இவர்களால் போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கை காக்க இயலவில்லை போர்ச்சுகீசியர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏராளமான இந்தியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். முஸ்லிம்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரான பகைமையை ஏற்படுத்தியது. போர்ச்சுகீசியர்கள் விஜயநகர பேரரசர்கள் மட்டுமே உறவு கொண்டிருந்தனர் ஆனால் விஜயநகரப் பேரரசுக்கு 1565 நடைபெற்ற தலைக்கோட்டைப் போருக்குப் பின் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இது போர்த்துக்கீசிய வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது. போர்ச்சுக்கல் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் வந்தது.
டச்சு
போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்கு பிறகு டச்சுக்காரர்கள் இந்தியாவில் வருகை புரிந்தனர். கிபி 632 ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனத்தை தோற்றுவித்தனர் இவர்கள் கீழை நாடுகளுடன் வியாபாரம் செய்ய ஈடுபட்டனர். இவர்களுக்கு இந்தியாவின் மீது அதிக ஆர்வம் இல்லை. நறுமணத்தீவுகளின் மீது இவர்கள் அதிக நாட்டம் செலுத்தினர். இருப்பினும் இவர்கள் இந்தியாவில் சின்சுரா, நாகப்பட்டினம், சூரத் மற்றும் மசூலிப்பட்டினத்தில் தங்கள் வணிக மையங்களை நிறுவினார். கிபி 1602 ஆம் ஆண்டு புலிகாட் ஏரி என அழைக்கப்படும் பழவேற்காட்டில் தங்கள் தளத்தை நிறுவி அங்கு கோட்டை ஒன்றைக் கட்டினர் இது டச்சுக்காரர்களின் தலைமை இடமாக திகழ்ந்தது
பின்னர்
கி.பி.1605இல் போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவை கைப்பற்றி இந்தோனேசியா தீவில்
(Spice Island) ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். மேலும் போர்ச்சுக்கீசியரிடமிருந்து நாகப்பட்டினத்தைக்
கைப்பற்றி, தென்னிந்தியாவில் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் பழவேற்காடு
(Pulicat) டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் 1690இல் பழவேற்காட்டிலிருந்து
தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றிக் கொண்டனர். இந்தியப் பொருட்களான பட்டு, பருத்தி,
இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருட்களாகும்.
கருப்பு மிளகு மற்றும் மற்ற நறுமணப் பொருட்கள் மீதான வியாபாரத்தில் அவர்கள் ஏகபோக உரிமை
பெற்றிருந்தனர். இந்தியாவில் பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்ன , நாகப்பட்டினம்,
பாலசோர் மற்றும் கொச்சின் போன்ற இடங்களில் அவர்களது முக்கிய வர்த்தக மையங்கள் இருந்தன.
ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனி 17ஆம் நூற்றாண்டு முழுவதும், டச்சு மற்றும் போர்ச்சுக்கீசியர்களுக்குப்
போட்டியாக இருந்தது. இந்நிலையில் 1623இல் டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில
வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களை இரக்கமின்றி கொன்றனர். இந்நிகழ்வு டச்சு
மற்றும் ஆங்கிலேயர்களிடையே மேலும் பகைமையை வளர்த்தது. 1759இல் நடைபெற்ற பெடரா போரில்
ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர். தொடர்ந்து டச்சு இறுதி வீழ்ச்சியை
எட்டியது. ஒன்றன் பின் ஒன்றாக தனது குடியேற்றங்களை ஆங்கிலேயரிடம் இழந்த டச்சு 1795இல்
முழுமையாக ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தது.
தமிழ்நாட்டில்
டச்சுக்காரர்கள்
1502 முதல் பழவேற்காட்டின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்திய போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களால் தங்களின் ஆதிக்கத்தை இழந்தனர். பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் 1613இல் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர். இந்தக் கோட்டை ஒரு காலத்தில் டச்சு அதிகார மையத்தின் இருப்பிடமாக இருந்தது.
அக்காலத்தில்
பழவேற்காட்டிலிருந்து வைரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. நாகப்பட்டினம்,
புன்னக்காயல், பரங்கிப்பேட்டை (Porto Novo) கடலூர் மற்றும் தேவனாம்பட்டினம் ஆகியன டச்சுக்காரர்களின்
கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகளாகும்.
