எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » ஐரோப்பியர் வருகை - போர்த்துகீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் - TNPSC

ஐரோப்பியர் வருகை - போர்த்துகீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் - TNPSC

இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே மிகப் பழங்காலம் தொட்டே தொடர்பு காணப்பட்டது. மேலும், அத்தொடர்பு அலெக்சாண்டர் வருகையால் மேலும் வலுவடைந்தது. இந்திய பொருளான பட்டு நறுமணப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஆடைகளுக்கு மற்றும் கைத்தறி ஆடைகள்  உள்ளிட்ட பொருள்களுக்கு வரவேற்பு காணப்பட்டது.

இந்தியாவில் மிளகு, மிளகாய் பட்டை, இஞ்சி, தேங்காய் சர்க்கரை, சாயப் பொருட்கள் போன்றவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. மூன்று முக்கிய வழித்தடங்கள் மூலமாக நடைபெற்றது. 

அவை ,
1.ஆப்கானிஸ்தான் மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் கடல் வழியாக கருங்கடல் தரைப் பகுதி வரையிலும் 
2.பாரசீகம் மற்றும் சிரியா வழியாக மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள அலெக்ஸாண்ட்ரியா வரையிலும் 
3.அரபிக்கடல் பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக கடல் மார்க்கம் ஆகிய மூன்று வழித்தடங்கள் வாயிலாக வியாபாரம் நடைபெற்றது.

1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்தைக் கைப்பற்றி ஐரோப்பியர்களுக்கு இடையூறு தந்தனர் வாணிபத்திற்கு தடை விதித்தனர் ஆப்கானிஸ்தான் வழியாக நடைபெற்ற வாணிபத்திற்கும் தடை விதித்தனர். 

அரேபியர்கள் படையெடுப்பின் விளைவாக மற்ற இரண்டு வழித்தடங்களும் கிபி எட்டாம் நூற்றாண்டில் தடைபட்ட எனவே ஐரோப்பியர்கள் இந்திய பொருட்கள் இன்றி அவதிப்பட்டனர் எப்படியாவது இந்திய பொருட்களை பெற வேண்டும் என்று பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இந்தியாவிற்கு புதிய கடல் வழி காணும் முயற்சியில் இறங்கினர் ஐரோப்பியர்கள்.

போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் புதிய கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்ச்சுகீசியர்கள் ஒருவரான சர் ஹென்றி மாலுமிகளுக்கு பயிற்சி அளிக்க அறிவியல் முறையில் அமைந்த பள்ளி ஒன்று தொடங்கினார் இவருக்கு கடல் பயணத்தின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மாலுமி ஹென்றி என்றே போற்றப்பட்டார்

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பார்த்தலோமிய டயஸ் என்பவர் கிபி 1487 ஆம் ஆண்டு முதன் முதலில் கடல் பயணத்தை மேற்கொண்டார் ஆப்பிரிக்காவின் தென் கோடி முனையில் வந்தடைந்தார். அச்சமயத்தில் அங்கு அதிகமாக புயல் வீசியதால் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை புயல் முனை என்று பெயரிட்டார். இதனைக் கடந்து சென்றால் புதிய பகுதிகளை காணலாம் என நம்பிக் கையை வெளிப்படுத்தினார் இதனால் புயல் முனை நன்னம்பிக்கை முனை என அழைக்கப்பட்டது.

வாஸ்கோடகாமா 

போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையை கடந்து மே 27 1498 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கோழிக்கோடு (கள்ளிக்கோட்டை) வந்தடைந்தார். கள்ளிக்கோட்டை மன்னர் சாமொரின் அவரை வரவேற்று உபசரித்தார் மேலும் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் வாணிபம் நடத்த அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் வாணிபம் செய்ய தொடங்கினர். இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கள்ளிக்கோட்டை கொச்சி, கண்ணனூர் ஆகிய இடங்களில் வணிகத்தலங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் வாணிபத்தை கவனிக்க பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்பவர் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் அரேபிய வியாபாரிகளளைத் தோற்கடித்து போர்த்துக்கீசியரின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

கப்பற்படையை வலிமை பெறச் செய்து இந்திய பெருங்கடல் பகுதியில் போர்ச்சுக்கீசியரின் செல்வாக்கை உறுதி செய்தார். இவரது கொள்கை நீல நீர் கொள்கை ஆகும் இதன் மூலம் மற்ற பகுதிகளை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். கிபி 1509 ஆம் ஆண்டு அல்மெய்டா எகிப்தியர்களால் கொல்லப்பட்டார்.

அல்போன்ஸ் டி அல்புகர்க் இவரின் இரண்டாவது ஆளுநராகப் பதவியேற்றார் இவர் மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தார் .பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கிபி 1500 ஆம் ஆண்டு கோவாவை கைப்பற்றி அதனனை தலைநகராக மாற்றினார்.

விஜயநகரப் பேரரசு தனது உறவை பலப்படுத்திக் கொண்டார். தூர கிழக்கு பகுதியில் அமைந்திருந்த மலக்கா தீவைக் கைப்பற்றினார். பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் என்ற இடத்தில் துறைமுகம் ஒன்றையும் கட்டினார். ஆதிக்கத்தை உண்மையாக நிலைநாட்டியவர் என்று போற்றப்படுகிறார் இவர் ஒரு சிறந்த நிர்வாகி. இந்துக்களிடம் ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்தினார்.

கல்வி வளர்ச்சிக்காக பல பள்ளிகளை திறந்தனர் போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்வதை ஊக்குவித்தார். இவரின் சமயக் கொள்கை முஸ்லிம்களுக்கு எதிரானது.இதனால் முஸ்லிம்களின் செல்வாக்கினை இவர் இழக்கத் தொடங்கினார்.இவர் கிபி 1516 ஆம் ஆண்டு கோவாவில் காலமானார்.இவரது மறைவிற்கு பிறகு போர்ச்சுகீசியர்கள் டாமன் டையூ பம்பாய் இலங்கை போன்ற பகுதிகளை கைப்பற்றினர் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் ஆதிக்கம் படிப்படியாக இந்தியாவில் வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

அல்புகர்க்கு பிறகு வந்தவர்கள் திறமை அற்றவர்களாக இருந்தார்கள் இவர்களால் போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கை காக்க இயலவில்லை போர்ச்சுகீசியர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏராளமான இந்தியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். முஸ்லிம்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரான பகைமையை ஏற்படுத்தியது. போர்ச்சுகீசியர்கள் விஜயநகர பேரரசர்கள் மட்டுமே உறவு கொண்டிருந்தனர் ஆனால் விஜயநகரப் பேரரசுக்கு 1565 நடைபெற்ற தலைக்கோட்டைப் போருக்குப் பின் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இது போர்த்துக்கீசிய வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது. போர்ச்சுக்கல் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் வந்தது.

டச்சு

போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்கு பிறகு டச்சுக்காரர்கள் இந்தியாவில் வருகை புரிந்தனர். கிபி 632 ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனத்தை தோற்றுவித்தனர் இவர்கள் கீழை நாடுகளுடன் வியாபாரம் செய்ய ஈடுபட்டனர். இவர்களுக்கு இந்தியாவின் மீது அதிக ஆர்வம் இல்லை. நறுமணத்தீவுகளின் மீது இவர்கள் அதிக நாட்டம் செலுத்தினர். இருப்பினும் இவர்கள் இந்தியாவில் சின்சுரா, நாகப்பட்டினம், சூரத் மற்றும் மசூலிப்பட்டினத்தில் தங்கள் வணிக மையங்களை நிறுவினார். கிபி 1602 ஆம் ஆண்டு புலிகாட் ஏரி என அழைக்கப்படும் பழவேற்காட்டில் தங்கள் தளத்தை நிறுவி அங்கு கோட்டை ஒன்றைக் கட்டினர் இது டச்சுக்காரர்களின் தலைமை இடமாக திகழ்ந்தது 

அகமதாபாத், சூரத், பாட்னா, புரோ, காம்ப்பே ,காசிம் பஜார்  போன்ற இடங்களில் வாணிபத்தலங்களை  நிறுவினர். இதற்கிடையில் ஆங்கிலேயர்கள் இந்தோனேசியாவில் வியாபாரம் செய்ய வியாபாரிகளை அனுப்பினர் இதனை டச்சுக்காரர்கள் ஏற்கவில்லை. எனவே 1623 ஆம் ஆண்டு அம்பாயினா என்ற இடத்தில் ஆங்கில வியாபாரிகளை கொன்றனர்.இது அம்பாயினா படுகொலை என்று அழைக்கப்படுகிறது இந்நிகழ்ச்சி ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் இடையே பகையை உருவாக்கியது இதன் பிறகு ஆங்கிலேயர்கள் நறுமணத்தை இவர்களை விட்டு வெளியேறி இந்தியா மீது முழு கவனத்தை செலுத்தினர் .ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்கள் க்கு போட்டியாக இந்தியாவில் வாணிபம் நடவடிக்கையில் ஈடுபட்டனர் இவர்களுடன் போட்டி போட முடியாமல் டச்சுக் காரர்கள் தங்கள் வணிக மையங்களை ஆங்கிலேயர்களுக்கு விட்டுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.

ஐரோப்பியர் வருகை - போர்த்துகீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும். 
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template