பல்வேறு பண மதிப்புகளில் அஞ்சல் அலுவலங்களிலிருந்து பத்திரங்களை வாங்குவதன் மூலம் வரப்பெற்ற முதலீடுகளை எளிமைப்படுத்துவதற்காகவும் மேலும் வசதிபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் கிசான் விகாஸ் பத்ரா..இதன் ஆங்கில சுருக்கம் KVP . இதன் ஆங்கில விரிவாக்கம் KISAN VIKAS PATRA.
1988 ம் வருடம் இந்திய அஞ்சல் துறையால் ஆரம்பிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டுவரை செயப்பட்டது. மீண்டும் இத்திட்டம் 2014 ல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெறக்கூடியவர்கள் இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருக்ககூடிய விவசாயிகள்.
திட்ட விளக்கம்:
அஞ்சல் அலுவலகம் சென்று 1000, 5000, 10000 மற்றும் 50000 மதிப்புள்ள முதலீட்டுப் பத்திரங்களைப் பெறலாம். ஒரு ஆண்டிற்கு 8.7 சதவீதம் வட்டியினை பெறலாம், 100 மாதங்களில் அதாவது 8 ஆண்டுகள் 2 மாதங்களில் உங்கள் சேமிப்பானது இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும்.இதன் இடைப்பட்ட காலத்தில் முதலீட்டை திரும்ப பெற முடியாது .30 மாதங்கள் கழித்தே திரும்ப பெற முடியும்.