அரசு மருத்துவனைகளில் காலியாக உள்ள 2345 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தகாலம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:
23.06.2019
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
27.02.2019
எழுத்துத் தேர்வு மையங்கள்:
சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர்
பணி: செவிலியர்
மொத்த காலியிடங்கள்: 2345
சம்பளம்: மாதம் ரூ.14,000
வயதுவரம்பு: 01.07.2019 ன் படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
57 வயதுவரை உள்ள எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி:
பொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டு படிப்புடன் Psychiatry-இல் 6 மாத பயிற்சி பெற்று மாநில செவிலியர் கவின்சில் பதிவு செய்திருக்கும் ஆண்களும், பொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டு படிப்புடன் Midwifery-இல் 6 மாத பயிற்சி பெற்று Nurse and Maternity Assistant ஆக பதிவு செய்திருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வினாக்கள்:
எழுத்துத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு செவிலியர் பாடப்பிரிவுகளில் இருந்து ஆங்கிலத்தில் கொள்குறி வகையில் 200 கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு செவிலியர் பாடப்பிரிவுகளில் இருந்து ஆங்கிலத்தில் கொள்குறி வகையில் 200 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700.
எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.