Ads Area

TNPSC - PODHUTAMIL - வினை முற்று,வியங்கோள் வினைமுற்று, வினையாலணையும் பெயர் கண்டறிதல்

வினை முற்று,வியங்கோள் வினைமுற்று, வினையாலணையும் பெயர்


வினைமுற்று என்றால் என்ன?

 
           முடிவு பெற்ற ஒரு வினைச்சொல்லே வினைமுற்று ஆகும்.

எ.கா. படித்தான்

            படித்தான் என்று சொன்னாலே ஒருவன் படித்து முடித்துவிட்டான் என்று பொருள்.

            இப்படி ஒரு வினை முற்று பெற்றால் அது வினை முற்று.

           'படித்தான்' என்பதில் 'படித்த' என்பது பெயரெச்சம்  (பார்க்க)
                                                      'படித்து' என்பது வினையெச்சம் (பார்க்க)
                                                      'படித்தான்' எனபது  வினைமுற்று..

          பெயரெச்சமும் வினையெச்சமும் முடிவைத் தராது.'படித்தான்' என்ற வார்த்தை முடிவை பெற்றிருக்கிறது.எனவே அது வினைமுற்று.

          கீழ்க்காண்பவனற்றுள் வினைமுற்றைக் கண்டுபிடி என வினா கேட்டால் விடையாக கொடுக்கப்பட்டிருக்கும் நான்கில் எந்த ஒரு விடை முடிவு பெற்றிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு விடையளியுங்கள்.

வினைமுற்றின் வகைகள்:

அ.தெரிநிலை வினைமுற்று
ஆ.குறிப்பு வினைமுற்று
இ.ஏவல் வினைமுற்று
ஈ.வியங்கோள் வினைமுற்று
உ.உடன்பாட்டு வினைமுற்று
ஊ.எதிர்மறை வினைமுற்று

இவ்வாறாக ஒரு வினைமுற்றை வகைப்படுத்திக் காணலாம்.\

அ. தெரிநிலை வினைமுற்று

        ஒரு வினைமுற்றானது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் ஆகிய ஆறிணையும் வெளிப்படையாக உணர்த்தி வரும். ஒரு செயல் நடந்து முடிந்ததாக தெரியும்.

(எ.கா) ஓவியன் சித்திரம் தீட்டினான்

             செய்பவன் - ஓவியன்
             கருவி - வர்ணம்
             நிலம் - சுவர்
             செயல் - தீட்டுதல்
             பொருள் - சித்திரம்
             காலம் - இறந்த காலம்

(எ.கா) எழிலரசி மாலை தொடுத்தாள்.
             செய்பவள் - எழிலரசி
              கருவி - நார், கை
              நிலம் - இருப்பிடம்
              செயல் - தொடுத்தல்
             பொருள் - மாலை
              காலம் - இறந்த காலம்.

ஆ.குறிப்பு வினைமுற்று

          திணை, பால் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டி காலத்தை மட்டும்
குறிப்பாக உணர்த்தி வரும் வினைக்குறிப்பே குறிப்பு வினைமுற்று எனப்படும். இது காலத்தை (வெளிப்படையாக) காட்டாது.

(எ.கா) வளவன் தற்போது பொன்னன்.
              செங்கண்ணன் கரியன்
              பாலன் இன்று செல்வன்

பொன்னன் - பொருள்
மதுரையான், குற்றாலத்தான் - இடம்
ஆதிரையான் - காலம்
செங்கண்ணன் - சினை
இனியன், கரியன் - பண்பு (அ) குணம்
நடிகன், நடையன் - தொழில்

         இவ்வாறாக பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகியவற்றைச் சார்ந்தே குறிப்பு வினைமுற்று அமையும்.

இ. ஏவல் வினைமுற்று
 
       முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும்.இது எதிர்காலத்தைக் காட்டி வரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.

ஏவல் ஒருமை வினைமுற்று
 
(எ.கா) நீ நட, நீ செய், நீ போ, நீ படி

ஏவல் பன்மை வினைமுற்று
 
(எ.கா) நீர் உண்குவீர்
              நீர் வாரீர்  
 
எ.வியங்கோள் வினைமுற்று.
 
       க-இய-இயர் என்ற விகுதிகளைப் பெற்று வரும்.

        வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டிக்கொடல் ஆகிய பொருள்களில் வரும்.இது மூன்று இடங்களையும் ஐம்பால் உணர்த்தி வரும்.

(எ.கா) வாழ்க, வாழிய, வாழியர், வாழ்த்துதல்
              ஒழிக, கெடுக, வைதல், செல்க
              வருக, ஈக, விதித்தல், தருக
             

வினையாலணையும் பெயர்:

        ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..

(எ.கா) படித்தவன்,
             கண்டவர்
             சென்றனன்

 எப்படி எளிதில் கண்டறிவது?:

            கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எந்த விடை அவர்,அவன்,அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு. கொள்க.

வினை முற்று,வியங்கோள் வினைமுற்று, வினையாலணையும் பெயர் கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.

Bottom Post Ad

Ads Area