Ads Area

தமிழகத்தின் பெருமைகள் - பொது அறிவு

       ணக்கம் தோழமைகளே.. தமிழகம் என்னென்ன பெருமைகளை தன்னிடத்தே வைத்திருக்கிறது என்பதையும் நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் இதிலிருந்தும் வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புகள் உள்ளன.எனவே தமிழகம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம் ஆகும். 

www.madhumathi.com
சென்னை மெரீனா கடற்கரை
                   
                       சென்னையின் பெருமைகள்



 மெரீனா கடற்கரை சென்னையில் உள்ள இந்த கடற்கரை  நகர்ப்புறத்தில்  உள்ள உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை.இதன் நீளம் 13 கி.மீ.
வைனுபாப்பு தொலைநோக்கி வேலூர் மாவட்டத்தில் காவனூர் என்ற இடத்தில் உள்ளது .இது ஆசியாவிலேயே மிகப்பெரியது.
 திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஜனவரி 1, 2000 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் திறக்கப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் உள்ள இந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.இது ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.இதன் சிறப்பு.இப்பேருந்து நிலையம்2003 ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவினால் தொடங்கி வைக்கப்பட்டது.
புழல் மத்திய சிறைச்சாலை திருவள்ளூர் மாவட்டம் புழலில் கட்டப்பட்டுள்ள இந்த சிறைச்சாலை ஆசியாவிலேயே மிகப்பெரியது.இதன் சிறப்பு ஒரே நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை சிறையிலடைக்கலாம்.
திருபுரம் வேலூர் அருகிலுள்ள திருபுரம் என்ற இடத்தில் ரூ.300 கோடி செலவில் தங்கத்தினால் ஆன கோயில் கட்டப்பட்டுள்ளது.இதன் முதல் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 24, 2007 அன்று நடந்தது.தமிழகத்தின் தங்க கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலின் தெய்வம் நாராயினி ஆகும்.

Top Post Ad

Bottom Post Ad

Ads Area