Ads Area

TNPSC | Suradha | சுரதா | தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | பொதுத்தமிழ் | Podhutamil

 


இயற்பெயர்: இராசகோபாலன். 

ஊர்: பழையனூர் (தஞ்சை மாவட்டம்)   

பெற்றோர்: திருவேங்கடம், செண்பகம் அம்மையார்  

பிறப்பு நவம்பர் 23, 1921  

மறைவு: ஜூன் 19,2006 
 



வாழ்க்கைக் குறிப்பு:
 
சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
 
1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். 
 
பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.
 
சுரதாவின் 'சொல்லடா' என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.

பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந் நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. 
 
அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.

தலைவன் இதழின் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். 
 
அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்க காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

திரைப்படத்துறையில் பாடல்கள் எழுதியுள்ளார். 
 
'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா'  இந்த இரண்டும் புகழ்பெற்ற பாடல்கள் ஆகும்.
 
மங்கயர்கரசி எனும் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

 தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.

படைப்புகளில் சில:

தேன்மழை 
துறைமுகம் 
சிரிப்பின் நிழல்
சுவரும் சுண்ணாம்பும் 
அமுதும் தேனும்
பாரதிதாசன் பரம்பரை  
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
 சாவின் முத்தம்

Bottom Post Ad

Ads Area