இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தரும் திட்டம்
திட்டத்தின் பெயர்:
இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தரும் திட்டம்
துறை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
திட்டத்தின் நோக்கம்:
1.பழங்குடியினரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் விதமாக சொந்த வீடு கட்டுவதற்கு ரூ. 2.50 லட்சம் நிதி உதவி வழங்குதல்
2.இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒன்றிற்கு 1.20 லட்சம் வழங்கப்படுகிறது.
3.முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு ஒன்றிற்கு 2.10 லட்சம் ரூபாய் வழங்குதல்
தகுதியானவர்கள் யார்?
பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்
வறுமைகோட்டிற்கு கீழுள்ளவர்களாக இருக்க வேண்டும்
வீட்டுமனை பட்டா உள்ளவர்களாக இருக்க வேண்டும்
இணைக்க வேண்டிய சான்றுகள்:
சாதிச்சான்று
வீட்டு உரிமைக்கான சான்று
விண்ணப்பிக்கும் அலுவலகம்:
மாவட்ட ஆட்சியரகம்,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அலுவலகம்