எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » TNPSC - Indian Geography - பேரண்டம் - விண்மீன் திரள் மண்டலம் -சூரியக்குடும்பம் - கோள்கள் - துணைக்கோள்கள் ஓர் பார்வை

TNPSC - Indian Geography - பேரண்டம் - விண்மீன் திரள் மண்டலம் -சூரியக்குடும்பம் - கோள்கள் - துணைக்கோள்கள் ஓர் பார்வை

பேரண்டத்தின் படிநிலைகள்:  

  • பேரண்டம்  
  • விண்மீன் திரள் மண்டலம் 
  • சூரிய குடும்பம் 
  • கோள்கள் 
  • துணைக்கோள்கள்  

பேரண்டம்:

பேரண்டம் என்பது மிகப் பரந்த விண்வெளி ஆகும். சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பெருவெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் நம்புகின்றனர். இந்தப் பேரண்டமானது கோடிக்கணக்கான விண்மீன்கள் மண்டலங்கள், விண்மீன்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள், கோள்கள் மற்றும் துணைக்கோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். 

விண்மீன் திரள்மண்டலம்:

ஈர்ப்புவிசையால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பு விண்மீன் திரள் மண்டலம் ஆகும். வான்வெளியில் விண்மீன் திரள் மண்டலங்கள் சிதறியும், குழுவாகவும் காணப்படுகின்றன பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் 5 பில்லியன் வருடங்களுக்குப் பின் பால்வெளி விண்மீன் மண்டலம் அதாவது Milkyway Galaxy உருவானது. நமது சூரியக் குடும்பம் பால்வெளி விண்மீன் மண்டலத்தில் காணப்படுகிறது.Andromeda விண்மீன் திரள் மண்டலம் மற்றும் Magellanic விண்மீன் மண்டலம் ஆகியன நமது பூமிக்கு மிக அருகாமையில் காணப்படும் வின்பின் திறன் மண்டலங்கள் ஆகும்

சூரிய குடும்பம்: (Solor System) சோலார் என்ற சொற்பதமானது சூரிய கடவுள் எனப்படும் Sol என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது ஆகும். சூரியக் குடும்பம் சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னதாக உருவாகியிருக்கலாம் என்பது அறிவியல் அறிஞர்களால் நம்பப்படுகிற ஒன்று. சூரியன் எட்டு கோள்கள், குறுங்கோள்கள், துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சூரியக் குடும்பம்.  இது ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பு.



சூரியன்:

சூரிய குடும்பத்தின் மையத்தில் சூரியன் அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து பொருள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. சூரியன், சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.7 சதவீதம் உள்ளது. சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வெப்பமான வாயுக்களால் ஆனது. சூரியன் தானே ஒளியைத் தரக்கூடிய தன்மை பெற்றது. சூரியன் ஒரு விண்மீன் ஆகும். சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ் ஆகும். சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களுக்கும் வெப்பத்தையும் ஒளியையும் சூரியன் அளிக்கிறது. அதன் வெப்பநிலை புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் ஆகின்றது. 

கோள்கள்: என்றால் சுற்றி வருபவர் என்று பொருள் சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும். 

வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களைத் தவிர பிற கோள்கள் அனைத்தும் சூரியனை எதிர் கடிகார சுற்றில் அதாவது மேற்கிலிருந்து கிழக்காக சுற்றிவருகின்றன. இவ்வாறு கோள்கள் சூரியனைச் சுற்றி வரக்கூடிய பாதை சுற்றுப்பாதை எனப்படுகிறது. 

கோள்கள் அனைத்தும் தத்தமது பாதையை விட்டு விலகாமல் சூரியனை சுற்றி வருவதற்கு சூரியன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.

 சூரியனுக்கு அருகில் உள்ள நான்கு கோள்களான புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் போன்றவை உட்புற கோள்கள் அல்லது புவிநிகர் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அளவில் சிறியன கோள்களின் மேற்பரப்பில் மலைகள் எரிமலைகள் மற்றும் தரைக்குழிவுப் பள்ளங்கள் காணப்படுகின்றன. 

சூரிய குடும்பத்தில் உள்ள நான்கு கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வெளிப்புறக்கோள்கள் அல்லது வியாழன் நிகர்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

இவை வாயுக்களால் நிரம்பி காணப்படுவதால் வளிமக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன. செவ்வாய் வியாழன் கோள்களுக்கிடையே சிறுகோள்  மண்டலம் காணப்படுகிறது.

1.புதன்: (அருகிலிருக்கும் கோள்)

சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் அளவில் மற்ற கோள்களை விட மிகவும் சிறியது. இக் கோளானது ரோமானிய கடவுளின் பெயரான மெர்க்குரி என அழைக்கப்படுகிறது. இக்கோயில் நீரும் வாயுக்களும் கிடையாது. 

இக்கோளில் வளிமண்டலம் இல்லாததால் அதிக வெப்ப நிலையும் இரவு நேரத்தில் கடும் குளிரும் காணப்படும். மேலும் புதன் கோளுக்கு துணைக்கோள்கள் எதுவும் இல்லை. அதிகாலைப் பொழுதிலும் அந்தி பொழுதிலும் நாம் வெற்றுக் கண்களால் காணமுடியும்.

2.வெள்ளி: (வெப்பமான கோள்)

வெள்ளி சூரியனிடமிருந்து இரண்டாவதாக அமைந்துள்ளது. பூமியைப் போன்றே ஒத்த அளவில் உள்ளதால் வெள்ளியும் புவியும் இரட்டைக் கோள்கள் என அழைக்கப்படுகின்றன.

இதன் சுழலுதல் காலம் மற்ற கோள்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. வெள்ளி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. யுரேனஸ் போன்றே கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது அதாவது கடிகாரச் சுற்று. இது மற்ற கோள்களைக் காட்டிலும் மிக் மெதுவாகச் சுற்றுகிறது. புதன் கோளைப் போன்று வெள்ளிக்கும் துணைக்கோள் இல்லை. அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய கடவுளான வீனஸ் என்ற பெயரால் இது அழைக்கப்படுகிறது. 

காலையிலும் மாலையிலும் விண்ணில் காணப்படுவதால் இதை விடிவெள்ளி மற்றும் அந்திவெள்ளி என்று அழைக்கிறோம். நிலவுக்கு அடுத்தபடியாக இரவில் பிரகாசமாக தெரியும் விண்பொருள் வெள்ளி ஆகும்.

3.புவி: (உயிர்க்கோளம்)

சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள புவி ஐந்தாவது பெரிய கோளாகும். புவியின் மேற்பரப்பு நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது என்பதால் நீலக்கோள் என்றும் நீர்க்கோள் என்றும் அழைக்கப்படுகிறது. ரோமானிய கடவுளின் பெயரால் அழைக்கப்படாத ஒரே கோள் புவி. 

புவியின் துருவ விட்டம் 2714 கிலோ மீட்டர் மற்றும் நிலநடுக்கோட்டு விட்டம் 12756 கிலோமீட்டர் ஆகும். புவி சூரியனை வினாடிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இக்கோளில் நிலம் நீர் மற்றும் வளிமண்டலம் காணப்படுவதால் உயிரினங்கள் வாழத் தகுதியான சூழல் நிலவுகிறது. பூமியின் ஒரே துணைக்கோள் நிலவாகும்

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு 150 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். மணிக்கு 800 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஒரு வானூர்தி சூரியனைச் சென்றடைய 21 வருடங்கள் ஆகும்.

சுழலுதல்:(Rotation)

பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றுவதை சுழலுதல் என்று கூறுகிறோம் மேற்கிலிருந்து கிழக்காக சுழலும் புவியானது ஒருமுறை சுழல்வதற்கு 23 மணிநேரம் 56 நிமிடங்கள் 4.9 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. ஒருமுறை சுழல்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒரு நாள் என்று கணக்கிடுகிறோம். புவி சுழலுவதன் காரணமாக இரவு பகல் ஏற்படுகிறது. 

புவி கோள வடிவமாக உள்ளதால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டுமே படுகிறது. அப்பகுதிக்கு அது பகல் பொழுது ஆகும். புவியின் ஒளி படாத பகுதி இரவாக இருக்கும்.இவ்வாறு புவியின் ஒளிபடும் பகுதியையும் ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு ஒளிர்வு வட்டம் (Terminator Line)என்று பெயர்.

புவியின் சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கிலோ மீட்டர் மணியாகவும் 60 டிகிரி வடக்கு அட்சரேகையில் 845 கிலோ மீட்டர் மணியாகவும் துருவப்பகுதியில் சுழலும் வேகம் சுழியமாகவும் இருக்கும்.

சுற்றுதல்:(Revolution)

புவி தனது நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றிவரும் நகர்வையே சுற்றுதல் என்று கூறுகிறோம். புவி வினாடிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றிவருகிறது. புவி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 1/4  நாட்கள் ஆகிறது இது தோராயமாக 365 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரு வருடம் என்று அழைக்கப்படுகிறது. மீதமுள்ள 1/4 நாட்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளாக கணக்கிடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. அதாவது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்களாக இருக்கும். அந்த வருடம் லீப் வருடம் என்று அழைக்கப்படுகிறது புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் தோன்றுகின்றன

புவி சூரியனைச் சுற்றி வருவதால் மார்ச் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 23ஆம் தேதி வரை ஆறு மாதங்கள் பூமியின் வட அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்து காணப்படும். அச்சமயத்தில் தென் அரைக்கோளாம் சூரியனிடம் இருந்து விலகி காணப்படுகிறது. 

அடுத்த ஆறு மாதங்கள் அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை புவியின் தென் அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாய்ந்தும் வ்ட அரைக்கோளம் சூரியனிடம் இருந்து விலகியும் காணப்படும். 

இவ்வாறு புவி தன் சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவதால் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வடக்காகவும் தெற்காகவும் நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய நாட்களில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும். அதனால் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவு பொழுது சமமாக காணப்படும். எனவே இந்த நாட்களில் பகல் இரவு சமநாட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதே போன்று ஜூன் 21 ஆம் நாள் கடகரேகை மீது சூரியனின் செங்குத்து கதிர்கள் விழுவதால் வட அரைக்கோளத்தில் அந்தநாள் மிக நீண்ட பகல் பொழுதை கொண்டிருக்கும். தென் அரைக்கோளம் அந்தநாள் நீண்ட இரவை கொண்டிருக்கும்.இந்த நிகழ்வு கோடைகால கதிர் திருப்பம் என்று அழைக்கப்படுகிறது. 

டிசம்பர் 22 ஆம் தேதி மகர ரேகையில் மீது சூரியனின் செங்குத்து கதிர்கள் விழுகின்றன. இந்நிகழ்விற்கு குளிர்கால கதிர் திருப்பம் என்று பெயர். இச்சமயத்தில் வட அரைக்கோளத்தில் அந்தநாள் மிக நீண்ட இரவு பொழுதை கொண்டிருக்கும். தென் அரைக்கோளம் அந்தநாள் நீண்ட பகலை கொண்டிருக்கும்.

4.செவ்வாய்: (செந்நிறக்கோள்)

செந்நிறக் கோள் என்று அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து நான்காவதாக காணப்படும் செவ்வாய்க் கோளானது அளவில் புதனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறிய கோளாகும். ரோமானிய போர்க்கடவுள் Mars பெயரால் அழைக்கப்படுகிறது. 

இதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு உள்ளதால் செந்நிறமாக தோற்றமளிக்கிறது. ஆகவே செவ்வாய் சிவந்தகோள் என்று அழைக்கப்படுகிறது இக்கோளின் வளிமண்டலம் முழுவதும் மெல்லியதாகும். இதன் துருவப் பகுதிகளில் புவியை போன்றே பனி உறைகள் அதாவது (Ice Caps) காணப்படுகின்றன. இக் கோளானது போபோஸ் (Phobos) மற்றும் (Deimos) டீமோஸ் என்ற இரு துணைக் கோள்களைக் கொண்டுள்ளது. செவ்வாய்க் கோளை ஆராய்வதற்காக சுற்றி வரும் கலங்களும் (Orbiters) தரை ஊர்திகளும் (Rovers) அனுப்பப்பட்டுள்ளன

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதியை ஆராய்வதற்காக 24.9.2014 அன்று மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியது. இதனால் இந்தியா செவ்வாய்க் கோளை ஆராயும் நாடுகளின் பட்டியலில் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் உள்ளது

5.வியாழன்: (பெருங்கோள்)

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் சூரியனிடமிருந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது ரோமானியர்களின் முதன்மை கடவுளான ஜூபிடர் என்கிற பெயரால் அழைக்கப்படுகிறது. 

நிலவு மற்றும் வெள்ளி கோளுக்கு அடுத்ததாக பிரகாசமாக விண்ணில் தெரிவது வியாழன் ஆகும். இக்கோள் தனது அச்சில் மிகவும் வேகமாக சுழலக்கூடியது ஆகும். சூரியனைப் போன்று இதன் வளி மண்டலத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் காணப்படுகின்றன. இக்கோள் மிக அதிகமான துணைக் கோள்களைக் கொண்டுள்ளது. (67 துணைக்கோள்கள்) அவற்றுள் அயோ, ஐரோப்பா, கனிமீடு, கேலிஸ்டோ (IO, EUROPA, GANYMEDE, CALLISTO) ஆகியன சில முக்கியமான மிகப்பெரிய துணைக்கோள்களாகும்.

6.சனி:(வளையங்கள் கொண்ட கோள்)

சூரியக்குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோளான சனி சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ளது. ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் Saturn என்று இது அழைக்கப்படுகிறது.

பாறைத்துகள்கள், பனித்துகள்கள் மற்றும் தூசுக்களால் ஆன பெரிய வளையங்கள் இக்கோளைச் சுற்றிக் காணப்படுகின்றன. 

சனி 62 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது அதிக துணைக்கோள்கள் கொண்ட இக்கோளில் மிகப் பெரிய துணைக்கோள் டைடன் ஆகும். சூரிய குடும்பத்தில் காணப்படும் துணைக் கோள்களில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களும் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே துணைக்கோள் டைடன் ஆகும். சனிக்கோளின் தன் ஈர்ப்புத்திறன் (Specific Gravity) நீரை விட குறைவாகும்.

7.யுரேனஸ்: (உருளும் கோள்)

வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால் 1781 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் இதுவாகும். இது சூரியனிடமிருந்து ஏழாவது அமைந்துள்ளது. .

இக்கோளில் மீத்தேன் வாயு உள்ளதால் இது பச்சை நிறமாகத் தோன்றுகிறது. இது கிரேக்க விண்கடவுளான யுரேனஸ்  பெயரால் அழைக்கப்படுகிறது.

வெள்ளிக் கோள் தன்னச்சில் கடிகார சுற்றில் சுற்றுகிறது. இதன் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் சுற்றுப்பாதையில் உருளுவது போன்று சூரியனை சுற்றி வருகிறது. இதன் 27 துணைக் கோள்களில் டைட்டானியா என்பது மிகப் பெரிய துணைக்கோளாகும்

8.நெப்டியூன்:(குளிர்ந்த கோள்) 

சூரிய குடும்பத்தில் எட்டாவது மற்றும் மிக தொலைவில் அமைந்துள்ள கோள் இதுவாகும் ரோமானிய கடல் கடவுளின் பெயரைக் கொண்ட இக்கோளில் பலத்த காற்று வீசும். 14 துணைக்கோள்கள் கொண்ட நெப்டியூனின் மிகப் பெரிய துணைக்கோள் டிரைட்டன் ஆகும். 

நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் மிகத் தொலைவில் உள்ளதால் மிகவும் குளிர்ந்து காணப்படுகிறது இக்கோளில் காணப்படும் நீலம் மற்றும் வெள்ளை நிறமானது யுரேனஸ் கோளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது.

குறுங்கோள்கள் :

நெப்டியூன் கோளுக்கு அப்பால் தொலைவில் காணப்படும் சிறிய விண் பொருட்கள் குறுங்கோள்களாகும். அவை மிகவும் குளிர்ந்து ஒளி இல்லாமலும் காணப்படுகின்றன. கோள வடிவில் காணப்படும் இவை கோள்களைப் போல இல்லாமல் தனது சுற்றுப்பாதையை பிற குறுங்கோள்களுடன் பகிர்ந்துகொள்ளும். புளூட்டோ, செரஸ், ஈரிஸ், மேக்மேக்  மற்றும் ஹௌமியா போன்றவை சூரிய குடும்பத்தில் காணப்படும் ஐந்து குறுங்கோள்கள் ஆகும்

நிலவு: (பூமியின் துணைக்கோள் )

கோள்களைச் சுற்றி வரும் விண் பொருட்கள் துணைக்கோள்கள் ஆகும். பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமும் புவியைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரமும் ஏறக்குறைய ஒன்றாக அதாவது 27 நாட்கள் 8 மணி நேரம் ஆகும்

நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது. இதன் காரணமாக விண்கற்களின் தாக்கத்தால் இதன் மேற்பகுதியில் அதிக அளவில் தரைக்குழிப்பள்ளங்கள் காணப்படுகின்றன.

புவியிலிருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது பூமியில் நான்கில் ஒரு பங்கை அளவுடையது. மனிதன் தரையிறங்கிய ஒரே விண்பொருள் நிலவு ஆகும்.

சிறு கோள்கள்: 

சூரியனைச் சுற்றி வரும் சிறிய திடப் பொருட்களே சிறுகோள்கள் எனப்படும். செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே சிறுகோள்கள் மட்டும் காணப்படுகிறது. அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் கோள்கள் என அழைக்கப்படுவதில்லை. 

வால் விண்மீன்கள்:

வால் விண் மீன்கள் தலை மற்றும் வால் பகுதிகளை கொண்டதாக காணப்படும். திடப் பொருளால் ஆன தலைப்பகுதி பனிக்கட்டிகளால் பிணைக்கப்பட்டிருக்கும். அதன் வால் பகுதி வாயுக்களால் ஆனது.

புவிக்கு அருகில் 76 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய ஹேலி வால்மீன் கடைசியாக 1986 ஆம் ஆண்டு வானில் தென்பட்டது. இது மீண்டும் 2061 ஆம் ஆண்டு விண்ணில் தோன்றும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

விண்கற்கள் மற்றும் விண்வீழ்கற்கள்:

சூரிய குடும்பத்தில் காணப்படும் சிறு கற்கள் மற்றும் உலோகப் பாறைகளால் ஆன பொருட்களை விண்கற்கள் என்று அழைக்கிறோம் இந்த விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தை அடையும் பொழுது உராய்வின் காரணமாக எரிந்து ஒளிர்வதால் எரிநட்சத்திரம் என்றும் அழைக்கிறோம். ஆனால் வளிமண்டலத்தை தாண்டி புவியின் மேற்பரப்பை தாக்கும் விண்கற்கள் விண்வீழ்கற்கள் என்று அழைக்கப்படுகின்றன

புவி கோள வடிவமானது இது தன் அச்சில் சுழல்கிறது பூமியின் வடதுருவத்தில் இருந்து இணையத்தின் வழியாக தென்துருவம் வரை செல்லக்கூடிய ஒரு கற்பனைக் கோடு புவியில் அச்சிடப்படும் 23 அரை டிகிரி சாய்ந்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது அதன் சுற்றுவட்ட பாதைக்கு 66 அரை டிகிரி கோணத்தை இந்த சாய்வு ஏற்படுத்துகிறது.



Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template